Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அன்னிய வணிக முதலீடுகளுக்கு அனுமதி கூடாது : நெல்லை டவுன் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

அன்னிய வணிக முதலீடுகளுக்கு அனுமதி கூடாது : நெல்லை டவுன் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

அன்னிய வணிக முதலீடுகளுக்கு அனுமதி கூடாது : நெல்லை டவுன் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

அன்னிய வணிக முதலீடுகளுக்கு அனுமதி கூடாது : நெல்லை டவுன் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 28, 2011 01:52 AM


Google News

திருநெல்வேலி : நெல்லையில் அன்னிய வணிக முதலீடுகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியது.நெல்லை டவுனில் வியாபாரிகள் சங்க 64வது பொதுக்குழுக்கூட்டம் தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

முன்னாள் செயலாளர் தர்மராஜ் நாடார் படம் திறக்கப்பட்டது. தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கல்லணை பள்ளி தலைமையாசிரியர் நடராஜனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.புதிய செயலாளராக பன்னீர்செல்வம், பொருளாளராக காளிராஜன், துணைச்செயலாளராக எம்.ஆர்.குணசேகரன் தேர்வு செய்யப்பட்டனர்.



தேர்த்திருவிழா கலை நிகழ்ச்சிகளை அமைத்த நெல்லை கல்சுரல் அகாடமி தலைவர் குணசேகரன், செயலாளர் காசிவிஸ்வநாதன், துணைத்தலைவர் சொனா. வெங்கடாசலம், வியாபாரிகள் சங்க மாவட்டச்செயலாளர் ராமகிருஷ்ணன், துணைச்செயலாளர் விநாயகம் உட்பட பலர் பேசினர்.டிஅன்ட் ஓ, பி.எப்.ஏ., உரிமங்களை மாநகராட்சி நிர்வாகம் வணிகர்களுக்கு வழங்குவது, எடையளவு குறித்து தொழிலாளர் துறை அறிவித்த புதிய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வது, அன்னிய வணிக முதலீடுகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.டவுன் ரதவீதி வணிகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us