உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய பணியிடம்
உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய பணியிடம்
உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய பணியிடம்
ADDED : ஆக 09, 2011 02:28 AM
திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தல் பணிகளை விரைவுபடுத்த, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்டோபர் இறுதியில் முடிகிறது. வாக்காளர் பட்டியலை ஊராட்சி வார்டு வாரியாக பிரிப்பது, ஓட்டுப்பெட்டிகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஊரக வளர்ச்சி துறையினர் ஈடுபட்டுள்ளனர். பணிகளை தீவிரப்படுத்த, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சொந்த மாவட்டத்தை சாராதவர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்தலுக்கான அனைத்து பணிகளையும், இவர்கள் கவனிப்பர்.


