Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நலிவடைந்த தொழிற்சாலைகளைமேம்படுத்த நடவடிக்கை

நலிவடைந்த தொழிற்சாலைகளைமேம்படுத்த நடவடிக்கை

நலிவடைந்த தொழிற்சாலைகளைமேம்படுத்த நடவடிக்கை

நலிவடைந்த தொழிற்சாலைகளைமேம்படுத்த நடவடிக்கை

ADDED : ஆக 20, 2011 11:28 PM


Google News
பொள்ளாச்சி:'சிறு, குறு மற்றும் நலிவடைந்த தொழிற்சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, ஊரக தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார்.

பொள்ளாச்சியிலுள்ள 'டான்சி' நிறுவனத்தை, ஊரக தொழிற்துறை அமைச்சர் சண்முகவேலு, ஆய்வு செய்தார். நிறுவன செயல்பாடு, கட்டடங்களின் தன்மையை கேட்டறிந்தார். அமைச்சர் கூறியதாவது: பொள்ளாச்சி 'டான்சி' நிறுவனத்தை புதுப்பிக்க, 40 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. டான்சி நிறுவனத்தில் புதிதாக மரச்சாமான்கள் செய்ய, 310 டன் மரம் வாங்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு தேவையான மரச் சாமான்கள், ஸ்டீஸ் சேர், டேபிள்கள் இங்கிருந்து வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நலிவடைந்த தொழிற்சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளுடன் ஆலோசித்து, நிதி ஒதுக்கீடு குறித்து மதிப்பீடு தயாரித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். திட்டங்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us