ADDED : ஆக 18, 2011 09:46 PM
ராஜபாளையம்:ராஜபாளையத்தில் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் தலைவர்
முத்துமணி தலைமையில் நடந்தது. செயலாளர் மாடசாமி முன்னிலை வகித்தார்.
முடிவில், ராஜபாளையத்தில் பை-பாஸ் ரோடு அமைக்கவேண்டும். போக்குவரத்து
நெரிசல் காரணமாக ஏற்படும் விபத்துகளை தடுக்க போலீஸ், நகராட்சி மற்றும்
நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். லாரிகளை நிறுத்த சகல
வசதிகளுடன் ஸ்டாண்டு அமைக்கவேண்டும்.
மதுரை-கொல்லம் ரோடு தேசிய நெடுஞ்சாலையில் இருந்தும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இவற்றை அகற்றி ரோடு அகலப்படுத்தவேண்டும்.
லாரி தொழில் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.


