/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சியில் தேர்தல் விதிகளை மீறி அரசியல் கட்சிகள் பேனர் அமைப்புகாஞ்சியில் தேர்தல் விதிகளை மீறி அரசியல் கட்சிகள் பேனர் அமைப்பு
காஞ்சியில் தேர்தல் விதிகளை மீறி அரசியல் கட்சிகள் பேனர் அமைப்பு
காஞ்சியில் தேர்தல் விதிகளை மீறி அரசியல் கட்சிகள் பேனர் அமைப்பு
காஞ்சியில் தேர்தல் விதிகளை மீறி அரசியல் கட்சிகள் பேனர் அமைப்பு
ADDED : செப் 27, 2011 11:26 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, அரசியல் கட்சிகள் பேனர் வைத்திருப்பது, அப்பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி பேனர்கள் அமைக்கவும், சுவர் விளம்பரங்கள் எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் தேர்தல் விதிகளைப் பற்றி கவலைப்படாமல், அ.தி.மு.க., தி.மு.க., சார்பில், நகரின் மையப் பகுதியில், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று, அ.தி.மு.க., வினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததையொட்டி, நகர வீதிகளில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. வழிநெடுகிலும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் மோகன் கூறும்போது, 'நகரில், சுவர்களில் எழுதப்பட்டுள்ள, அரசியல் கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணி நடந்து வருகிறது. கட்சியினர் கொடிகளை உடனே அகற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளோம்' என்றார்.


