ADDED : ஜூலை 29, 2011 11:40 AM
ஆக்ரா : ஆக்ராவில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆக்ரா-ஜெய்பூர் நெடுஞ்சாலையில் நடைபெற்ற இவ்விபத்தில் மோதிக் கொண்ட இரு பஸ்களும் அருகில் இருந்த பதோலி கால்வாயில் உருண்டு விழுந்தன. ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான இரு பஸ்களும் கான்பூரில் இருந்து ஜெய்பூர் நோக்கி சென்றவைகளாகும்.


