Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/டிராக்டர் மீது ரயில் மோதி ஒருவர் காயம்

டிராக்டர் மீது ரயில் மோதி ஒருவர் காயம்

டிராக்டர் மீது ரயில் மோதி ஒருவர் காயம்

டிராக்டர் மீது ரயில் மோதி ஒருவர் காயம்

ADDED : ஜூலை 13, 2011 04:24 PM


Google News

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே, ஆள் இல்லாத ரயில்வே கேட்டை கடந்த டிராக்டர் மீது, ரயில் மோதியதில், டிராக்டர் டிரைவர் காயமடைந்தார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 34; டிராக்டர் டிரைவர். டிராக்டரில் செங்கல் ஏற்றிய இவர், தனது கிராமத்திலிருந்து தொட்டிக்குப்பம் வழியாக, பட்டி நோக்கி சென்றார். தொட்டிக்குப்பம் ஆள் இல்லாத ரயில்வே கேட்டை கடந்த போது, சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த பாசஞ்சர் ரயில், டிராக்டர் மீது மோதியது. இதில், டிராக்டர் இன்ஜின் நசுங்கி, தூக்கி வீசப்பட்ட ரமேஷ், காயத்துடன் உயிர் தப்பினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us