Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மணல் திருடிய 7 வாகனங்கள் பறிமுதல்: ஐந்து பேர் கைது

மணல் திருடிய 7 வாகனங்கள் பறிமுதல்: ஐந்து பேர் கைது

மணல் திருடிய 7 வாகனங்கள் பறிமுதல்: ஐந்து பேர் கைது

மணல் திருடிய 7 வாகனங்கள் பறிமுதல்: ஐந்து பேர் கைது

ADDED : செப் 26, 2011 09:07 PM


Google News

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், மணல் திருடிய, 4 லாரிகள் மற்றும் 3 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, அதன் டிரைவர்கள், 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளில், தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதாக வந்த தகவலையடுத்து, எஸ்.பி., வனிதா உத்தரவின்பேரில், போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கே.கே.சத்திரம் பகுதியில் மணல் திருடிய இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் அதன் டிரைவர்கள் தப்பிவிட்டனர். இதேபோல், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி.,சாலையில் மணல் திருடி வந்த, 4 லாரிகள் மற்றும் ஒரு டிராக்டரை, ஆரம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அதன் டிரைவர்களான கம்மவார்பாளையம் தினேஷ், 27, புதுகும்மிடிப்பூண்டி கஜேந்திரன், 28, செங்குன்றம் மோகன், 24, ஆந்திர மாநிலம் வரதபாளையம் முரளி, 26 மற்றும் நாயுடுபேட்டை பிரசாத், 26 ஆகிய 5 பேரை கைது செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us