ADDED : செப் 26, 2011 10:06 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்.
இவரிடம் வாழைக்குளம் தெருவை ரத்தினகுமார்,48, கார்க் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2007 ஏப்ரல் 16ம் தேதி 2லட்ச ரூபாய் கடன் வாங்கினார். அதற்காக 2007மே 3ம் தேதியிட்ட செக்கை கொடுத்தார். செக் வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பியது. இதையடுத்து, முருகேசன் ஸ்ரீவி., விரைவு கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி செல்லத்துரை, ''ரத்தினகுமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை, அவரின் நிறுவனத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம், இழப்பீடு தொகை ஒருலட்சம் சேர்த்து மூன்று லட்ச ரூபாய் வழங்க,'' உத்தரவிட்டார்.


