/உள்ளூர் செய்திகள்/தேனி/எதிர்ப்புகளை கடந்து வந்த ஆம்புலன்ஸ் சேவைஎதிர்ப்புகளை கடந்து வந்த ஆம்புலன்ஸ் சேவை
எதிர்ப்புகளை கடந்து வந்த ஆம்புலன்ஸ் சேவை
எதிர்ப்புகளை கடந்து வந்த ஆம்புலன்ஸ் சேவை
எதிர்ப்புகளை கடந்து வந்த ஆம்புலன்ஸ் சேவை
ADDED : அக் 11, 2011 11:12 PM
மூணாறு : பல்வேறு எதிர்ப்புகளை கடந்து ஆம்புலன்ஸ் வாகனம், மீண்டும் மூணாறை மையப்படுத்தி செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய கிராம சுகாதாரத்துறை சார்பில்,மாநில மருத்துவ சேவை திட்டத்தில், இடுக்கி மாவட்டத்திற்கு 36 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு அதிநவீன ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டன.இதில் ஒன்று அடிமாலி தாலுகா ஆஸ்பத்திரியை மையமாக கொண்டு செயல்பபட்டது. அங்கு தேவைக்கேற்ப ஆம்புலன்ஸ்கள் உள்ளதால்,மருத்துவ வசதிகள் போதிய அளவில் இல்லாத சுற்றுலா நகரான மூணாறில் செயல்பட தேவிகுளம் சப் கலெக்டர் ராஜமாணிக்கம் வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி மூணாறை மையமாகக் கொண்டு ஆம்புலன்ஸ் செயல்பட்டு வந்தது.இந்நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை, அரசு உத்தரவின்படி அடிமாலியில் இருந்து இயக்க வேண்டும் என தனிநபர் ஒருவர் கலெக்டரிடம் புகார் அளித்தார். இதனை மேற்கோள் காட்டி செப்., 21ல் சிலர் ஆம்புலன்ஸ் வாகனத்தை அடிமாலிக்கு கொண்டு சென்றனர்.மூணாறில் மருத்துவ தேவைகளின் நிலை குறித்து, தேவிகுளம் சப் கலெக்டர்,தேசிய கிராம சுகாதார மிஷனின் தலைவரான இடுக்கி மாவட்ட பஞ்சாயத்து தலைவரிடம் விளக்கினார்.இதை தொடர்ந்து, ஆம்புலன்ஸை மூணாறை மையப்படுத்தி இயக்க முடிவு செய்து,மீண்டும் மூணாறுக்கு கொண்டு வரப்பட்டது.


