/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பொதுவார்டு தேர்தலில் எட்டு பெண்கள் போட்டிபொதுவார்டு தேர்தலில் எட்டு பெண்கள் போட்டி
பொதுவார்டு தேர்தலில் எட்டு பெண்கள் போட்டி
பொதுவார்டு தேர்தலில் எட்டு பெண்கள் போட்டி
பொதுவார்டு தேர்தலில் எட்டு பெண்கள் போட்டி
ADDED : அக் 11, 2011 01:51 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் பொதுவார்டுகளில் 8 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
திண்டிவனம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 11 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இதை தவிர மற்ற சில வார்டுகளிலும் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் திருமகள், கஸ்தூரி, தி.மு.க., சார்பில் ரேணுகா, ம.தி.மு.க., சார்பில் நிர்மலா, காங்., சார்பில் முனியம்மாள், சுயேச்சையாக கலா, முத்துட்சுமி, குமாரி உள்ளிட்ட 8 பேர் பொது வார்டு தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த பெண் வேட்பாளர்கள் அனைவரும் ஆண் வேட்பாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சுறுசுறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


