/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டையகிளப்பும் மாண்டுவண்டி போட்டிதூத்துக்குடி மாவட்டத்தில் பட்டையகிளப்பும் மாண்டுவண்டி போட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டையகிளப்பும் மாண்டுவண்டி போட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டையகிளப்பும் மாண்டுவண்டி போட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டையகிளப்பும் மாண்டுவண்டி போட்டி
ADDED : ஜூலை 23, 2011 03:23 AM
செய்துங்கநல்லூர்:தொடர்ந்து நடக்கும் மாட்டு வண்டிப் போட்டிகளால்
கருங்குளம் யூனியனில் முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.தற்போது
பழமையான வீர விளையாட்டுகளில் ஒன்றான மாட்டு வண்டிப் போட்டிகள்
பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கிராமங்களில் கோயில் கொடை
விழாவினை முன்னிட்டு இப்போட்டிகளை எப்போதாவது ஒரு சிலர் மட்டுமே
இப்போட்டிகளை நடத்தி வந்தனர்.இதற்காக ரேஸ் வண்டி வைத்திருப்பவர்கள் ராஜ
மரியாதையாக மாடுகளை அழைத்து வந்து ரேஸில் இறக்குகின்றனர். பின்னர் ரேஸில்
ஓடுவதற்காக அதை அடித்து ஆணி வைத்துள்ள கம்பால் குத்தி புண்ணாக்கி
வருகின்றனர். ரேஸ் முடிவில் ஓடி வந்த மாடுகளைப் பார்த்து பொதுமக்கள்
கண்ணீர் விடுகின்றனர். இருந்தாலும் மாட்டு வண்டிப் பந்தயத்தை ரசித்து
பார்க்கின்றனர். இந்த கலாச்சாரம் இப்போது அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இதுவரை கிராமங்களில் உள்ள ரோடுகளில் நடந்த ரேஸ் இப்போது மெயின் ரோடுகளில்
நடக்கின்றது. இதற்காக போக்குவரத்தை நிறுத்தும் போது பல பேர்
பாதிக்கப்படுகின்றனர். முக்கியமாக நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இதற்கு
போலீஸ் அனுமதி கேட்டு செல்லும் போது அரசியல் செல்வாக்கு தேவைப்படுகின்றது.
எனவே ஆளும் கட்சி பிரமுகர்களை தேடிச் செல்ல வேண்டியதாகிறது. இவ்வாறு
நடத்தப்படும் ரேஸ்களுக்கு டி.எஸ்.பி.,தலைமையில் பல இன்ஸ்பெக்டர்கள்,
எஸ்.ஐ.,க்கள், போலீஸ்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டியதாகிறது. ஒவ்வொரு
ரேஸ்க்கும் முதல், இரண்டாம், மூன்றாம், ஆறுதல் என பல தரப்பில் பரிசுகள்
வழங்குகின்றனர். இதற்காக விழா குழுவினர் உள்ளூர் பஞ்.,தலைவர்கள், யூனியன்
கவுன்சிலர்கள், சேர்மன்கள், கட்சி கிளை செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள்,
மாவட்ட பஞ்.,கவுன்சிலர்கள் என பொது வாழ்வில் தன்னை அர்பணித்துக்
கொண்டவர்களை அணுகி நன்கொடை கேட்கின்றனர். சில கிராமங்களில் கட்டாயமாக
வசூலிக்கப்படுகிறதாம். நோட்டீஸில் பெயரையும், பரிசுத் தொகையையும் பிரிண்ட்
செய்து கட்டாயப்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். இதற்காக அவர்களிடம் பணம்
இல்லாவிட்டாலும் நகை போன்ற பொருட்களை அடகு வைத்து நன்கொடை கொடுத்து தன்னை
விளம்பரப்படுத்தி கொள்கிறார்களாம். இதனால் மாட்டுவண்டிப் போட்டிகள்
நடத்துவோர் பெருகிக் கொண்டே போவதாக அவர்கள் கூறுகின்றனர். தற்போது கல்யாண
வீடுகளிலும், மாட்டு வண்டிப் போட்டிகள் நடத்தும் கலாச்சாரம் கால் ஊன்றி
உள்ளது. இதனால் கருங்குளம் பகுதியில் உள்ள முக்கிய புள்ளிகள் கலக்கம்
அடைந்துள்ளனர். இதற்கு அரசு ஏதாவது முடிவு எடுக்க வேண்டும் என அவர்கள்
கூறியுள்ளனர்.


