Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தகவல் தொகுப்பு படிவம் தயாரிப்பு வட்டார வள மைய ஆசிரியர்களுக்கு பயிற்சி

தகவல் தொகுப்பு படிவம் தயாரிப்பு வட்டார வள மைய ஆசிரியர்களுக்கு பயிற்சி

தகவல் தொகுப்பு படிவம் தயாரிப்பு வட்டார வள மைய ஆசிரியர்களுக்கு பயிற்சி

தகவல் தொகுப்பு படிவம் தயாரிப்பு வட்டார வள மைய ஆசிரியர்களுக்கு பயிற்சி

ADDED : அக் 05, 2011 02:12 AM


Google News
கோவை : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தகவல் தொகுப்பு படிவம் (டைஸ்) தயாரிப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் (பொறுப்பு) ரங்கராஜன், புள்ளியல் அலுவலர் குணசேகரன் தலைமையில் இப்பயிற்சி முகாம் நடந்தது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 22 வட்டாரங்களை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனர்கள், மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 50 பேர் பங்கேற்றனர்.அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் (பொறுப்பு) ரங்கராஜன் கூறியதாவது:பிரைமரி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 3,042 பள்ளிகளில் தகவல் தொகுப்பு படிவம் சேகரிக்கப்படுகிறது. இப்பள்ளிகள், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலுள்ள கட்டமைப்பு, பின் எண், பஞ்சாயத்து உட்பட பள்ளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பள்ளி கட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதா, மென்மையாக பாதிக்கப்பட்டுள்ளதா எனவும், கழிப்பிடம், விளையாட்டு மைதானம், மின்சாரம், குடிநீர், கரும்பலகை, பள்ளி காம்பவுண்ட் நிலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு விவரங்களும் இதில் இடம்பெறும். பள்ளி குழந்தைகளின் படிப்பு, வயது, எண்ணிக்கை, இயலா குழந்தைகள், குடியிருப்பு பகுதியில் படிக் கும் குழந்தைகளின் எண்ணிக்கை, பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை என குறிப்புகள் சேகரிக்கப்படும். ஆசிரியர்களின் தகுதி, சிறப்பு தகுதி,வருகைப் பதிவு, அவர்கள் பங்கேற்ற பயிற்சி வகுப்புகள் குறித்தும் தெரிவிக்கப்படும். பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மானியம், ஆசிரியர் மானியம் சேகரித்து 2011-12ம் ஆண்டு பட்ஜெட் மற்றும் மேம்பாட்டுக்காக இத்தகவல் தொகுப்பு படிவம் தயாரிக்கப்படுகிறது. அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் சேகரிக்கப்படும் விவரங்களை, வட்டார வளமைய ஆசிரியர் பயற்றுனர்கள் சேகரிக்கின்றனர். இத்தகவல் தொகுப்பு படிவம் மாவட்ட அளவில் தயாரிக்கப்படுகிறது. இறுதியில் அனைவருக்கும் திட்ட இயக்க மாநில திட்ட இயக்குனருக்கு வரும் நவ., மாதம் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.டைஸ் ஒருங்கிணைப்பாளர் மெல்பா, ஒருங்கிணைப்பாளர்கள் விஜயலட்சுமி, சுதாகர்பால், கிருபாமனோன்மணி ஆகியோர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us