தேக்கு மரங்கள் ரூ.34 லட்சத்திற்கு ஏலம்
தேக்கு மரங்கள் ரூ.34 லட்சத்திற்கு ஏலம்
தேக்கு மரங்கள் ரூ.34 லட்சத்திற்கு ஏலம்
ADDED : ஆக 11, 2011 01:07 AM
புவனகிரி : புவனகிரியில் வனத்துறைக்குச் சொந்தமான தேக்கு மரங்கள், 34 லட்சத்து, 7 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் கீரப்பாளையம், லால்பேட்டை ஆகிய இரு இடங்களில், மத்திய தேக்கு மர சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு சேமிக்கப்படும் தேக்கு மரங்கள் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு, மாதம் ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. கீரப்பாளையம் சேமிப்பு கிடங்கில், 75 ரகங்களுக்கு நேற்று ஏலம் விடப்பட்டது. சென்னை தலைமை வன பாதுகாப்பு அலுவலர் ஆனந்த நாயக் தலைமையில் ஏலம் நடந்தது.


