சட்ட விரோதமாக உடலுறுப்பு மாற்றினால் 10 ஆண்டு சிறை
சட்ட விரோதமாக உடலுறுப்பு மாற்றினால் 10 ஆண்டு சிறை
சட்ட விரோதமாக உடலுறுப்பு மாற்றினால் 10 ஆண்டு சிறை
ADDED : ஆக 13, 2011 12:49 AM

புதுடில்லி : மனித உடல் உறுப்புகள் தொடர்பான சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு, 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவுக்கு, லோக்சபாவில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மசோதாவை தாக்கல் செய்து, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் பேசியதாவது: மனித உடல் உறுப்புகள் தொடர்பான சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கும் வகையில், இந்த மசோதாவில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சட்ட விரோத மனித உடல் உறுப்புகள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கும், சட்ட விரோத உடலுறுப்பு மாற்றத்தில் ஈடுபடுவோருக்கும் இனிமேல், 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்; 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தற்போது இந்த குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனையும், 20 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது என்றார்.


