/உள்ளூர் செய்திகள்/தேனி/சபரிமலையில் மினரல் வாட்டர் கேரள வனத்துறை புதுமுடிவுசபரிமலையில் மினரல் வாட்டர் கேரள வனத்துறை புதுமுடிவு
சபரிமலையில் மினரல் வாட்டர் கேரள வனத்துறை புதுமுடிவு
சபரிமலையில் மினரல் வாட்டர் கேரள வனத்துறை புதுமுடிவு
சபரிமலையில் மினரல் வாட்டர் கேரள வனத்துறை புதுமுடிவு
ADDED : ஆக 21, 2011 01:36 AM
மூணாறு : ''சபரிமலையில் ரூ.2க்கு காலி பாட்டில்களை திரும்ப பெறும் நிறுவனங்களின் 'மினரல் வாட்டர்' களை மட்டும் விற்க அனுமதி அளிக்கப்படும்,'' என கேரள வனத்துறை அமைச்சர் கணேஷ்குமார் கூறினர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-சபரிமலையில் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வனத்துறையினரால் தயாரிக்கப்படும் 'சபரி ஜலம்' எனும்(ஒரு லிட்டர்) மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதன் காலி பாட்டில் ஒரு ரூபாய்க்கு திரும்ப பெறப்படுகிறது.புதுமுடிவு: வரும் சீசன் முதல் சபரிஜலம் காலிபாட்டில் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் தர முடிவு செய்து தேவசம் போர்டுக்கு தெரியபடுத்தியுள்ளோம்.அதேபோல், காலி வாட்டர் பாட்டில்களை ரூ. 2க்கு திரும்ப பெறும் நிறுவனங்களின் 'மினரல் வாட்டர்' களை மட்டும் சபரிமலையில் விற்க அனுமதி அளிக்கப்படும், என்றார்.


