Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கலெக்டரிடம் வக்கீல் புகார்

கலெக்டரிடம் வக்கீல் புகார்

கலெக்டரிடம் வக்கீல் புகார்

கலெக்டரிடம் வக்கீல் புகார்

ADDED : அக் 11, 2011 01:55 AM


Google News

விழுப்புரம் : சங்கராபுரம் பகுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

சங்கராபுரம் அடுத்த திருவரங்கம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிகுமார். வக்கீல் பணி புரிகிறார். இவர் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு: சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஐம்படை, திருவரங்கம், சு.கள்ளிப்பாடி கிராமங்களில் கடந்த கால தேர்தல்களின்போது சட்டம்-ஒழுங்கு பாதிப்பு நிகழ்ந்துள்ளது. பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ள இந்த மூன்று ஓட்டுப்பதிவு மையங்களிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற கலெக்டர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வக்கீல் லட்சுமிகுமார் தனது மனுவில் கூறியுள்ளார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us