சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
ADDED : ஜூலை 31, 2011 01:04 AM
சென்னை : சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
விழாக்காலத்தையொட்டி, பயணிகள் நெரிசலை குறைப்பதற்காக, சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே, வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இச்சிறப்பு ரயில்கள், ஆக., 16, 23, 30, செப்., 6, 13, 20, 27, அக்., 4 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த தேதிகளில் இரவு, 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள், அடுத்தநாள் மதியம் 2 மணிக்கு, நாகர்கோவில் சென்று சேரும். இதேபோல, நாகர்கோவிலில் இருந்து, சென்னைக்கு, ஆக., 17, 24, 31, செப்., 7, 14, 21, 28, அக்., 5 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாகர்கோவிலில் இருந்து மாலை 5.05 க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்கள் அடுத்தநாள் காலை 8.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இத்தகவல், தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


