Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

ADDED : ஜூலை 31, 2011 01:04 AM


Google News

சென்னை : சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

விழாக்காலத்தையொட்டி, பயணிகள் நெரிசலை குறைப்பதற்காக, சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே, வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இச்சிறப்பு ரயில்கள், ஆக., 16, 23, 30, செப்., 6, 13, 20, 27, அக்., 4 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த தேதிகளில் இரவு, 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள், அடுத்தநாள் மதியம் 2 மணிக்கு, நாகர்கோவில் சென்று சேரும். இதேபோல, நாகர்கோவிலில் இருந்து, சென்னைக்கு, ஆக., 17, 24, 31, செப்., 7, 14, 21, 28, அக்., 5 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாகர்கோவிலில் இருந்து மாலை 5.05 க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்கள் அடுத்தநாள் காலை 8.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இத்தகவல், தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us