/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஒன்றிய பா.ம.க., பொதுக் குழு கூட்டம்ஒன்றிய பா.ம.க., பொதுக் குழு கூட்டம்
ஒன்றிய பா.ம.க., பொதுக் குழு கூட்டம்
ஒன்றிய பா.ம.க., பொதுக் குழு கூட்டம்
ஒன்றிய பா.ம.க., பொதுக் குழு கூட்டம்
ADDED : செப் 04, 2011 11:21 PM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் பா.ம.க., தெற்கு ஒன்றிய பொதுக் குழு கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். சுரேஷ், ராஜா, அன்புமணி முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலாளர் கலிவரதன், மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட தலைவர் அமுத மொழி, மாநில மகளிரணி செயலாளர் காசாம்பூ பூமாலை, ராமு பேசினர். சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தகுதியான இடத்தை தேர்வு செய்து தரும்படி தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது. மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அரசு நிர்ணயித்த விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும். நகரில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். சங்கராபுரம் நகரில் பொது மக்களுக்கு நவீன கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.
கள்ளக்குறிச்சி நகரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும், சங்கராபுரம் நகரை தலைமையிடமாக கொண்டு ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைக்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்ளுதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.


