ADDED : ஆக 01, 2011 11:52 PM
ஊட்டி : நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், டெபாசிட்
சேகரிப்பு முகாம் நடந்தது.ஊட்டி மார்க்கெட் கிளையில் நடந்த முகாமில், 1
கோடியே 40 லட்சம் ரூபாய் டெபாசிட் திரட்டப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில்
வெங்கடேஷன் வரவேற்றார். வங்கியின் மூத்த வாடிக்கையாளர் பெரியசாமி தலைமை
வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் மணி பேசினார். டெபாசிட்
தொகைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வங்கி உதவி பொதுமேலாளர் தேவராஜ்,
கடன் மேலாளர் விஸ்வநாதன், மேலாளர் சுந்தரி, உதவி மேலாளர் சாந்தி, மனோகரி
பேசினர். மார்க்கெட் கிளை மேலாளர் தேவகி நன்றி கூறினார்.


