/உள்ளூர் செய்திகள்/சென்னை/தி.நகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்தி.நகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
தி.நகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
தி.நகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
தி.நகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
ADDED : அக் 07, 2011 12:43 AM
சென்னை : தீபாவளியை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
நாளை முதல் (8ம்தேதி)மாற்றம் அமலுக்கு வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள், பட்டாசு மற்றும் நகைகள் வாங்க தி.நகரில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால் ஏற்படும் நெரிசல் மிக அதிகம். நெரிசலை குறைக்கும் விதமாக நாளை முதல் போக்குவரத்து, கீழ்கண்ட முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. பனகல் பூங்கா மேம்பாலம், ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. வாகனங்கள், வடக்கு உஸ்மான் சாலையிலிருந்து மேட்லி சாலை சந்திப்புக்கு செல்லலாம்.
மேட்லி சாலை சந்திப்பிலிருந்து மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல, தடை விதிக்கப்படுகின்றன. தி.நகர் பகுதிக்குள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.
வாகன நிறுத்துமிடங்கள்: பர்கிட் சாலை, தண்டபாணி தெரு, வி.என்.சாலை, பாஸ்யம் சாலை மற்றும் கோட்ஸ் சாலை ஆகிய இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தற்காலிகமாக ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்கப்படுகிறது. முத்துரங்கன் சாலை, வி.என்.சாலை, சோமசுந்தரம் விளையாட்டு மைதானம், தியாகராய சாலை மேற்கு மற்றும் கிழக்கு புறம், பர்கிட் சாலை வடக்கு புறம் ஆகிய இடங்களில், பொதுமக்கள் தங்கள் கார்களை நிறுத்திக் கொள்ளலாம்.
பள்ளி விடுமுறை நாட்களில், பிரகாசம் சாலையிலுள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா பள்ளி ஆகிய பள்ளிகளில், இரு சக்கர வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். இது தவிர ராமநாதன் தெரு, மகாலட்சுமி தெரு, மோதிலால் தெரு ஆகிய இடங் களில் உள்ள தனியார் வாகன நிறுத்தங்களிலும், வாகன நிறுத்த வசதி உள்ளது.


