Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஆமை வேகத்தில் நடக்கும் சாத்தை., யூனியன் அலுவலகம் கட்டட பணிகள்

ஆமை வேகத்தில் நடக்கும் சாத்தை., யூனியன் அலுவலகம் கட்டட பணிகள்

ஆமை வேகத்தில் நடக்கும் சாத்தை., யூனியன் அலுவலகம் கட்டட பணிகள்

ஆமை வேகத்தில் நடக்கும் சாத்தை., யூனியன் அலுவலகம் கட்டட பணிகள்

ADDED : ஆக 28, 2011 01:02 AM


Google News

சாத்தான்குளம் : 18 மாதங்களாகியும் கட்டி முடிக்கப்படாமல் உள்ள சாத்தான்குளம் யூனியன் அலுவலக கட்டடத்தை விரைந்து முடிக்க மாவட்ட திட்ட அதிகாரி உத்தரவிட்டார்.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய கட்டடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என யூனியன் சேர்மன் ஆனந்தராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி புதிய கட்டடம் கட்ட ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 18 மாதங்களுக்கு முன்பு வேலைகள் தொடங்கியும் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. எனவே கட்டடப் பணிகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி மாவட்ட திட்ட அதிகாரி அருள்மணி, சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்திற்கு வந்தார். யூனியன் ஆணையாளர் சுப்பிரமணியன் கூடுதல் ஆணையாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் வரவேற்றனர். கட்டடப் பணிகளை ஆய்வு செய்த திட்ட அதிகாரி அருள்மணி விரைந்து கட்டடப் பணிகளை முடிக்க உத்தரவிட்டார். சாத்தான்குளம் யூனியன் சேர்மன் ஆனந்தராஜ், யூனியன் இன்ஜியர்கள் மாதவன், பெலிக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us