/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/பாபநாசம் காவிரியற்றில்விநாயகர் சிலைகள் விசர்ஜனம்பாபநாசம் காவிரியற்றில்விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
பாபநாசம் காவிரியற்றில்விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
பாபநாசம் காவிரியற்றில்விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
பாபநாசம் காவிரியற்றில்விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
ADDED : செப் 05, 2011 12:38 AM
பாபநாசம்: பாபநாசத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர்
சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.பாபநாசத்தில் விநாயகர்
சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாபநாசம் சன்னதி தெரு, 108
சிவாலயம்,கஞ்சிமேடு, இரட்டை பிள்ளையார்கோவில், ரயிலடி, திருப்பாலத்துறை,
வங்காரம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த, விநாயகர் சிலைகள்
பேண்ட் முழக்கத்துடன் ஊர்வலமாக திருப்பாலத்துறை நவபாரத் வந்தடைந்தது.
பின்னர் விநாயகர் சிலைகள் பாபநாசம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு
செல்லப்பட்டது.ஊர்வலம் முடிந்ததும் பாபநாசம் காவிரி ஆற்றில் விநாயகர்
சிலைகள் அனைத்தும் விசர்ஜனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தின்போது
அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க, பாபநாசம் டி.எஸ்.பி சீனிவாசன்
தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.


