Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பயிர் சாகுபடியை அதிகரிக்க தமிழக அரசு முடிவு

பயிர் சாகுபடியை அதிகரிக்க தமிழக அரசு முடிவு

பயிர் சாகுபடியை அதிகரிக்க தமிழக அரசு முடிவு

பயிர் சாகுபடியை அதிகரிக்க தமிழக அரசு முடிவு

ADDED : ஆக 21, 2011 02:19 AM


Google News
சென்னை : 'தமிழகத்தில் பயிர் சாகுபடியை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, ஜூலை 28ம் தேதி, தாமதமாக திறக்கப்பட்டதால், குறுவை நெல் சாகுபடிப் பரப்பில் குறைவு காணப்பட்டது. நடப்பாண்டில், மேட்டூர் அணையில் தண்ணீர் போதுமான அளவு இருந்ததால், முதன்முறையாக ஜூன் 6ம் தேதி அணையினை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து, முன்கூட்டியே குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்பதாலும், அறுவடை சமயத்தில் நெற்பயிருக்கு வடகிழக்கு பருவ மழையினால், அதிக பாதிப்பு ஏற்படாது என்பதாலும், உரிய காலத்தில் குறுவைப் பயிர் அறுவடை செய்யப்பட்டு விடும். பின், அதே பரப்பில் மீண்டும் சாகுபடியை மேற்கொள்ள முடியும். இதைக் கருத்தில் கொண்டு, அரசு எடுத்த முடிவு, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2010 நவம்பர் மூன்று, நான்காம் வாரங்களில், பெய்த கனமழையினால், 26 மாவட்டங்களில், பயிர்கள் நீரில் மூழ்கின. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால், தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் அதிகளவு பாதிப்புக்குள்ளாகின.இதனால், பல மாவட்டங்கள் குறிப்பாக, காவிரி பாசனப் பகுதியை உள்ளடக்கிய மாவட்டங்களில், ஆகஸ்டு மாதத்தில் சாகுபடி செய்ய வேண்டிய சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதோடு, 50 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.சென்ற ஆண்டு, 60.50 லட்சம் எக்டேர், பயிர் சாகுபடி மற்றும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 46.40 லட்சம் எக்டேர் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. நடப்பாண்டில், 53.50 லட்சம் எக்டேர் பயிர் சாகுபடி மற்றும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இலக்கை அடைவதற்கானவழிகள்: ஐந்து ஆண்டுகளில், 75 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாகவும், 50 சதவீதத்திற்கு அதிகமாக உற்பத்தித் திறனை உயர்த்தவும், பயிர் செய்யும் திறனை அதிகரிக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றவும், அனைத்து வேளாண் பணிகளை விவசாயிகள் தெரிந்து கொள்ளவும், திட்டப்பயன்கள் வேளாண் விவசாயிகளை முழுமையாக சென்றடைவதை உறுதி செய்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதில், முதல் கட்டமாக வேளாண் உற்பத்தியில் நிலைத்தன்மை அடைவதை உறுதி செய்வதற்கு, 2011-12, 2012-13 மற்றும் 2013 - 14ம் ஆண்டுகளுக்கான பண்ணை அளவிலான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தகவலே இல்லாமல் இயங்கும் தலைமை தபால் துறை அலுவலகம்

சென்னை : நாடு முழுவதும், பல ஆண்டுகளாக செயல்பட்ட,'சான்று ஒப்புகை அத்தாட்சி' திட்டத்தை, எவ்வித அறிவிப்பின்றி நிறுத்திய, தபால் துறையின் நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இத்திட்டம் கைவிடப்பட்டதற்கான தகவல்கள், தமிழக தலைமை தபால் துறை தலைவர் அலுவலகத்தில் இல்லாதது வேடிக்கையாக உள்ளது.உலகில் மிகப்பெரிய தபால் நிலையக் கட்டமைப்பை கொண்டிருக்கும் இந்திய தபால் துறை,'தபால் விநியோகம், தபால் அட்டை, அஞ்சல் தலை, மணி ஆர்டர், இன்லேண்ட் லெட்டர்' விற்பனை உள்ளிட்ட பாரம்பரிய பணிகளில் ஈடுபட்டு வருகிறது.ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில்,'சான்று ஒப்புகை அத்தாட்சி' (க்ணஞீஞுணூ இஞுணூtடிஞூடிஞிச்tஞு ணிஞூ கணிண்tடிணஞ்) என்ற திட்டம், இந்திய தபால் துறை துவக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே நடைமுறைக்கு வந்தது. கடந்த 150 ஆண்டுகளாக, நடைமுறையில் இருந்த இத்திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.நவீன மயமாக்கல் மற்றும் லாப நோக்கு என்ற பெயரில், தபால் துறை மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பரவலான எதிர்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில், எவ்வித முன்னறிவிப் பின்றி, 'சான்று ஒப்புகை அத்தாட்சி' என்ற திட்டத்திற்கு மூடு விழா நடத்திய, தபால் துறையின் நடவடிக்கைக்கு, தபால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இத்திட்டம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழக வட்ட தலைமை தபால் துறை அலுவலகத்தில் கேட்டபோது, இதற்கான தகவல்கள் இல்லை எனத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, மாவட்ட நுகர்வோர் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் சடகோபன் கூறியதாவது:என் அலுவல் சார்ந்த அனைத்து கடிதங்களையும்,'சான்று ஒப்புகை அத்தாட்சி' மூலம் அனுப்புவது வழக்கம். சமீபத்தில், கடிதங்களை அனுப்ப தபால் நிலையம் சென்றேன். அப்போது, இனி இந்த முறையில் கடிதங்களை அனுப்ப முடியாது. இத்திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று தபால் ஊழியர்கள் கூறினர். 'எப்போது, எதற்காக' சான்று ஒப்புகை அத்தாட்சி திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து ஊழியர்களுக்கே தகவல் தெரியவில்லை.கடந்த ஜூலை மாதம், தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகத்தில், இத்திட்டம் குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டேன். அதற்கு கிடைத்த பதில்கள் அதிர்ச்சியாக உள்ளன.திட்டம் துவக்கப்பட்ட ஆண்டு, எதற்காக கைவிடப்பட்டது, இத்திட்டத்தால், கடந்த 10 ஆண்டுகளில் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் இல்லை என தமிழக வட்ட தலைமை தபால் துறை அலுவலகம் பதிலளித்தது ஏமாற்றம் அளிக்கிறது. இது தபால் துறையின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.சேவை புரியும் எந்த ஒரு அரசு நிறுவனமும், மக்களுக்காக ஒரு திட்டத்தை துவக்கும் முன் அல்லது திட்டத்தை நிறுத்தும் முன், அதற்கான அறிவிப்பை செய்தித்தாள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், இத்திட்டத்தை நிறுத்தியதை தெரியப்படுத்தாமல், அரசிதழில் வெளியான ஆணை எண்ணை கையால் எழுதி தெரிவித்தது ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஒரு காலத்தில், சிறப்பான நிர்வாகத்தால் அனைவரின் பாராட்டையும் பெற்ற தபால் துறையின், தமிழக வட்ட தலைமை தபால் துறை அலுவலகத்தில் ஒருதிட்டம் குறித்த அடிப்படைதகவலே இல்லாதது வேதனையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

பா.சேதுராமன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us