உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க சர்வதேச குழு : இலங்கை தமிழ் தேசிய கூட்டணி கோரிக்கை
உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க சர்வதேச குழு : இலங்கை தமிழ் தேசிய கூட்டணி கோரிக்கை
உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க சர்வதேச குழு : இலங்கை தமிழ் தேசிய கூட்டணி கோரிக்கை
கொழும்பு : 'யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலை, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த குழு, கண்காணிக்க வேண்டும்'என, இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் எம்.பி., மாவை சேனாதிராஜா கூறுகையில், ''எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, ஆளும் கட்சியினரால், மிரட்டலும், அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், தேர்தல் நேர்மையாக நடக்க வாய்ப்பு இல்லை. எனவே, உள்ளாட்சி தேர்தல்களை, சர்வதேச குழு கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.
சாகவச்சேரி வேட்பாளர் சிவாஜிலிங்கம் கூறுகையில்,''தற்போதுள்ள சூழ்நிலை, மிகவும் மோசமாக உள்ளது. அரசு அதிகாரிகளும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்,'' என்றார்.
இதுகுறித்து, யாழ்ப்பாண மாவட்ட தலைமை அதிகாரி இமெல்டா சுகுமார் கூறுகையில், ''தேர்தலில் போட்டியிடும் யாருக்கும், நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்துவது தான், எங்கள் குறிக்கோள். இந்த பகுதி, வளர்ச்சியடைய வேண்டும் என்பது தான், எங்களின் நோக்கம்,'' என்றார்.


