Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஆழ்வார்குறிச்சி கோயிலில் செந்தூர காப்பு வழிபாடு

ஆழ்வார்குறிச்சி கோயிலில் செந்தூர காப்பு வழிபாடு

ஆழ்வார்குறிச்சி கோயிலில் செந்தூர காப்பு வழிபாடு

ஆழ்வார்குறிச்சி கோயிலில் செந்தூர காப்பு வழிபாடு

ADDED : ஜூலை 14, 2011 01:09 AM


Google News

ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக அனுமனுக்கு செந்தூர காப்பு வழிபாடு நடந்தது.ஆழ்வார்குறிச்சி கீழ கிராமத்தில் வேங்கடேச பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயிலில் வேங்கடேசபெருமாள், சீதா, பூமாதேவியர், ஆஞ்சநேயர், லெட்சுமி நரமசிம்மர், கருடர் உட்பட பரிவார தேவதைகள் எழுந்தருளியுள்ளனர். இங்கு தூணில் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உலக நன்மைக்காக ஆஞ்சநேயருக்கு செந்தூர காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.சிறப்பு பூஜைகளை ரெங்கநாத ஐயங்கார், நம்பிநாராயணன், சம்பத்குமார் செய்திருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us