உலக தரத்தில் சின்னமுட்டம் துறைமுகம்: மீன்வளத்துறை அமைச்சர் உறுதி
உலக தரத்தில் சின்னமுட்டம் துறைமுகம்: மீன்வளத்துறை அமைச்சர் உறுதி
உலக தரத்தில் சின்னமுட்டம் துறைமுகம்: மீன்வளத்துறை அமைச்சர் உறுதி
UPDATED : ஜூலை 23, 2011 05:48 PM
ADDED : ஜூலை 23, 2011 05:47 PM
நாகர்கோவில் : கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் உலக தரத்துக்கு உயர்த்தப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் செய்ய வேண்டிய பணிகள் பற்றி அமைச்சர்கள் ஜெயபால் மற்றும் பச்சைமால் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் ஜெயபால் நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் 45 கடலோர மீனவ கிராமங்கள் உள்ளது. கடலில் அடிக்கடி மீனவர்கள் காணாமல் போவதும், அவர்களை தேட போதுமான வசதிகள் இல்லாததும் பற்றி மீனவர்கள் புகார் தெரிவித்தனர். அதிநவீன மீட்பு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வழங்க வேண்டும் என்ற மீனர்வர்களின் கோரிக்கை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மீன்பிடி தடை காலத்தில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மீனவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் 22 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இது இனி ஒரு லட்சத்து 83 ஆயிரம் மீனர்வர்களுக்கு வழங்கப்படும். கன்னியாகுமரி சின்னமுட்ட மீன்பிடி துறைமுகம் 43 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும். குளச்சல் மற்றும் தேங்காப்பட்டணம் துறைமுகப்பணி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கபூனாவில் இருந்து வல்லுநர்கள் குழு வருகிறது. இவர்கள் கடற்கரையை பார்வையிட்ட பின்னர் அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் கடலரிப்பு தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


