ADDED : அக் 04, 2011 08:34 PM
முதுநகர்: நில அபகரிப்பு வழக்கில் சிக்கி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நேருவை மேலும் ஒரு வழக்கில் திருச்சி போலீசார் கைது செய்தனர்.
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி, முன்னாள் அமைச்சர் நேரு கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மேலும் மூன்று நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஒரு வழக்கில் நேருவுக்கு கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று, திருச்சி மாநகர நில அபகரிப்பு குற்றப்பிரிவு போலீசார் 147, 148, 365, 323, 427, 307 மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நேற்று காலை திருச்சி இன்ஸ்பெக்டர் சேரன் கடலூர் மத்திய சிறையில் உள்ள நேருவிடம் கைது செய்வதற்கான எப்.ஐ.ஆர்., நகலை காண்பித்து கையெழுத்து பெற்று அவரை கைது செய்தார்.


