/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆதிதிராவிட மாணவியருக்கு ஆங்கில பேச்ய் பயிற்சிஆதிதிராவிட மாணவியருக்கு ஆங்கில பேச்ய் பயிற்சி
ஆதிதிராவிட மாணவியருக்கு ஆங்கில பேச்ய் பயிற்சி
ஆதிதிராவிட மாணவியருக்கு ஆங்கில பேச்ய் பயிற்சி
ஆதிதிராவிட மாணவியருக்கு ஆங்கில பேச்ய் பயிற்சி
ADDED : ஆக 22, 2011 01:03 AM
காரைக்கால் : காரைக்கால் மாவட்ட வேலைவாய்ப்பகம் சார்பில் ஆதிதிராவிட
மாணவியர்களுக்கு ஆங்கில பேச்ய் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்ட வேலைவாய்ப்பகம் சார்பில், ஆதிதிராவிடர் நலத்துறையின்
கீழ் முல்லை நகரில் உள்ள அரய் மாணவியர் விடுதியில் உள்ள 100 பேருக்கு
சிறப்பு கூறு திட்டத்தின் கீழ் இரண்டு பகுதியாக இலவச ஆங்கில பேச்ய் பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட்டது. முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 20
நாட்களுக்கு நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக கடந்த ஜூலை 21ம் தேதி முதல்
இப்பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டது. இதில் 100 மாணவியர் கலந்து கொண்டு
பயிற்சி பெற்றனர். நிறைவு விழாவிற்கு தொழிலாளர் துறை அதி காரி தயாளன்
முன்னிலை வகித்தார். ஜே.ஏ.எஸ்., கம்ப்யூட்டர் நிறுவன ஜாபர் சாதிக்,
தொழிற்சாலைகளின் ஆய்வாளர் கனகராஜ், திட்டத்துறை இணை இயக்குநர் சாந்தா
வில்லியம்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை
வழங்கினர். வேலை வாய்ப்பு அதிகாரி கீதா நன்றி கூறினார்.


