ADDED : ஆக 30, 2011 12:05 AM
கமுதி:கமுதியில் தே.மு.தி.க., பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ஜின்னா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாநில இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் தலைமையிட பேச்சாளர் சேகர் பேசினர். மாவட்ட விவசாய அணி செயலாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், கோவிந்தராஜ், வக்கீல் அணி செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய இளைஞர் அணி சந்திரன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


