/உள்ளூர் செய்திகள்/சென்னை/கள்ளத் தொடர்பை கண்டித்த பா.ம.க., பிரமுகர் கொலைகள்ளத் தொடர்பை கண்டித்த பா.ம.க., பிரமுகர் கொலை
கள்ளத் தொடர்பை கண்டித்த பா.ம.க., பிரமுகர் கொலை
கள்ளத் தொடர்பை கண்டித்த பா.ம.க., பிரமுகர் கொலை
கள்ளத் தொடர்பை கண்டித்த பா.ம.க., பிரமுகர் கொலை
ADDED : செப் 27, 2011 10:58 PM
சென்னை : கள்ளத் தொடர்பைக் கண்டித்த பா.ம.க., பிரமுகர், சரமாரியாக குத்திக் கொல்லப்பட்டார்.
இதில் தொடர்புடைய மூன்று பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். சென்னை, தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அய்யப்பன், 57; ஆர்.கே.நகர் பகுதி பா.ம.க., செயலர். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவரது மகளுடன், அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலு, கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அய்யப்பன் கண்டித்தார். இதனால், ஆத்திரமடைந்த வடிவேலு, கடந்த 24ம் தேதி, அய்யப்பனை கத்தியால் சரமாரியாக குத்தினார். ஆபத்தான நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இதுகுறித்து, புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிந்து விசாரித்து வந்தார். இதனிடையே, கொலையில் தொடர்புடைய வடிவேலு, 27, பாட்ஷா, 26, ஆரியபாதம், 26, ஆகிய மூவரும் எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.


