Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/காங்கயம் தாலுகாவில் மனு நீதி நாள் முகாம்

காங்கயம் தாலுகாவில் மனு நீதி நாள் முகாம்

காங்கயம் தாலுகாவில் மனு நீதி நாள் முகாம்

காங்கயம் தாலுகாவில் மனு நீதி நாள் முகாம்

ADDED : ஜூலை 13, 2011 10:01 PM


Google News
திருப்பூர் : காங்கயம் தாலுகா, பழையகோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது மேலப்பாளையம்.

அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்துசாமி தலைமை வகித்தார். தாசில்தார் குருநாதன், ஊராட்சி தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலசுப்ரமணியம் வரவேற்றார்.ஆறு விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான சான்று, இயற்கை மரணத்துக்கான ஈமச்சடங்கு உதவித்தொகையாக 12 ஆயிரத்து 500 ரூபாய், ஐந்து பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. விவசாயிகள் பயனடையும் வகையில், பாசிப்பயறு விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us