/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாம்பழப்பட்டு கிராமத்தில் இந்திய கம்யூ., சாலை மறியல்மாம்பழப்பட்டு கிராமத்தில் இந்திய கம்யூ., சாலை மறியல்
மாம்பழப்பட்டு கிராமத்தில் இந்திய கம்யூ., சாலை மறியல்
மாம்பழப்பட்டு கிராமத்தில் இந்திய கம்யூ., சாலை மறியல்
மாம்பழப்பட்டு கிராமத்தில் இந்திய கம்யூ., சாலை மறியல்
ADDED : செப் 10, 2011 03:22 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே இந்திய கம்யூ., கட்சியினர் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு மெயின் ரோடு அருகே உள்ள இடத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசி த்து வரும் 140 குடும்பத்தினர்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க இந்திய கம்யூ., கட்சியினர் அரசு அதிகாரிகளிடம் தொட ர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மறியல் போராட்டம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி தலைமையில் திரண்ட 100க்கும் மேற்பட்டோர் மாம்பழப்பட்டு பஸ் நிறுத்தம் முன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். காணை இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையிலான போலீசார் தலையிட்டு மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்தினர்.தொடர்ந்து தாசில்தார் ஜவகர், டி.எஸ்.பி., சேகர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.


