/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/தேர்தல் பிரச்சாரத்தில் கம்யூ.,க்கள் பனிப்போர்தேர்தல் பிரச்சாரத்தில் கம்யூ.,க்கள் பனிப்போர்
தேர்தல் பிரச்சாரத்தில் கம்யூ.,க்கள் பனிப்போர்
தேர்தல் பிரச்சாரத்தில் கம்யூ.,க்கள் பனிப்போர்
தேர்தல் பிரச்சாரத்தில் கம்யூ.,க்கள் பனிப்போர்
ADDED : அக் 12, 2011 11:50 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே பனிப்போர் முற்றிவருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதை விட மாறி, மாறி குறைகளை பட்டியலிடுவதில் தான் இருகட்சி தலைவர்களும் குறியாக உள்ளனர்.தமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிய கம்யூனிஸ்ட் கட்சிகள் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இருந்தும் சில மாவட்டங்களில் கூட்டணி தர்மத்தை மீறி இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தலை சந்திக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் சில உள்ளாட்சிமன்ற பதவியிடங்களுக்கு இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகிறது.புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு தே.மு.தி.க., ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜியாவுதீன் போட்டியிடுகிறார். இதே பதவிக்கு புதிய தமிழகம், மக்கள் தமிழகம், மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிகள் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சண்முகா பழனியப்பன் போட்டியிடுகிறார்.ஒரே பதவிக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளதால் புதுக்கோட்டை நகராட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இதற்கிடையே புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.தமிழக அரசியலில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கும் கொள்கை ரீதியாக சில வேறுபாடுகள் உள்ளது. குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளது என தா. பாண்டியன் குற்றம்சாட்டினார். தேர்தலில் இப்படிப்பட்ட துரோகிகளை அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் முன் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜியாவுதீனை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் பேசியதாவது:இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே கொள்கை ரீதியாக சில வேறுபாடுகள் உள்ளதாக தா.பாண்டியன் கூறியுள்ளார். இதில், தவறில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இதுவரை யாருக்கும் துரோகம் இழைத்தது கிடையாது.உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இழுபறி நிலை நீடித்ததால் அ.தி.மு.க.,விலிருந்து இரு கம்யூனிஸ்ட்டுகளும் இணைந்துதான் வெளியேறியது. தே.மு.தி.க., வுடன் அணி சேர்ந்து தேர்தலை சந்திப்பது என்ற முடிவையும் இருகட்சிகளும் இணைந்தே எடுத்தது.இதன்படி, கடந்த 26ம் தேதி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை அவரது அலுவலகத்துக்குச் சென்று சந்திப்பது என்ற முடிவையும் இருகட்சிகளும் இணைந்துதான் எடுத்தது. ஆனால் 26ம் தேதி தே.மு.தி.க., அலுவலகத்துக்கு வருவதற்கு பதில் போயஸ் தோட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் சென்றதே இதுதான் துரோகம் என பதலடி கொடுத்தார்.இரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் இத்தகைய குற்றச்சாட்டுகளால் வேட்பாளர்கள் மட்டுமின்றி வாக்காளர்களும் நிலைகுலைந்துள்ளனர்.


