/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வீடுகளுக்குள் படையெடுக்கும் கம்பளி பூச்சிகள்வீடுகளுக்குள் படையெடுக்கும் கம்பளி பூச்சிகள்
வீடுகளுக்குள் படையெடுக்கும் கம்பளி பூச்சிகள்
வீடுகளுக்குள் படையெடுக்கும் கம்பளி பூச்சிகள்
வீடுகளுக்குள் படையெடுக்கும் கம்பளி பூச்சிகள்
ADDED : செப் 07, 2011 12:45 AM
திருப்பூர் : வீடுகளுக்குள் அணி, அணியாய் படையெடுத்து வரும் கம்பளி
பூச்சிகளால், திருப்பூர் சத்யா நகர், அண்ணா நகர் பொதுமக்கள் கடும்
அவதிப்படுகின்றனர்.திருப்பூர் சங்கிலி பள்ளம் ஓடையின் கரையில் அமைந்துள்ள
41வது வார்டு சத்யா நகர் மற்றும் 47வது வார்டு பெரிய தோட்டம் அண்ணா நகர்
பகுதிகளில் ஆயிரம் வீடுகள் உள்ளன.
சாக்கடை கழிவு நீர் ஓடும் இந்த ஓடையின்
சுகாதாரக்கேடுகளால் பாதித்து வந்த இப்பகுதி மக்கள், தற்போது புதுவிதமான
பிரச்னையால் கடுமையான வேதனையை அனுபவித்து வருகின்றனர். வீடுகளுக்குள்
ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கம்பளி பூச்சிகள், ஆண்கள், பெண்கள்,
குழந்தைகளை தாக்கி வருகின்றன. மூன்று மாதங்களுக்கு முன் துவங்கிய கம்பளி
பூச்சிகளின் படையெடுப்பு, தற்போது பல்கி, பெருகி இரண்டு குடியிருப்புகளில்
உள்ள வீடுகளை முற்றிலும் ஆக்கிரமித்துள்ளன.சங்கிலி பள்ளத்தின் கரையில் உள்ள
மரங்கள், வீடுகளின் மேற்கூரைகள், சுவர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும்
இவை வியாபித்துள்ளன. இங்கிருந்து ஊர்ந்து வரும் கம்பளி பூச்சிகள் உணவு
பண்டங்கள், குடிநீரை ஆக்கிரமித்துக் கொள்வதால், உணவு உட்கொள்வதே இப்பகுதி
மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.மேலும், ஆண்கள், பெண்கள்
உடல்களில் ஏறி, கடித்தும் வருகின்றன. இதனால், அரிப்பு, தோல் வீக்கம்,
சிவந்து போதல், காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதித்து வருகின்றனர். அடை,
அடையாய் வீடுகளின் மேற்கூரையில் கூடு கட்டியுள்ள கம்பளி பூச்சிகள் இரவு
நேரங்களில் தூங்குபவர்கள் மீது விழுந்தும், கடித்தும் வருகின்றன.
இத்தொந்தரவால் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இப்பகுதி
மக்கள் கூறியதாவது:மூன்று மாதத்துக்கு முன் குறைந்தளவு கம்பளி பூச்சிகள்
தென்பட்டன. நாளடைவில் இவை ஆயிரக்கணக்கில் அதிகரித்தன. இதற்கு காரணம், ஓடை
ஓரத்திலுள்ள பாதம், ஆமணக்கு மரம், வீடுகளில் உள்ள முருங்கை மரம்
உள்ளிட்டவைகளில் அதிகளவு கூடு கட்டி பெருகி வந்ததால், அனைத்தையும் வெட்டி,
தீயிட்டு கொளுத்தினர்.ஆனால், தொடர்ந்து கம்பளி பூச்சிகளின் எண்ணிக்கை பல
மடங்கு அதிகரித்து, தற்போது வீடுகளுக் குள்ளேயே கூடு கட்ட ஆரம்பித்து
விட்டன. அவற்றை பிடித்து அழித்தாலும், குறையாமல், மேலும், மேலும்
அதிகரித்து வருகிறது.சமைத்து வைக்கும் உணவுகள், உணவு பொருட்கள், குடிநீர்
ஆகியவற்றிலும் இவை விழுந்து விடுவதால் பயன்படுத்த முடியாத நிலை
ஏற்படுகிறது. மேலும், இரவு தூங்கும்போதும், மாலை, அதிகாலை நேரங்களில்
கம்பளி பூச்சிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால், தோல் அரிப்பு
உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, பெரும்பாலானவர்கள் தொடர் மருத்துவ
சிகிச்சை எடுத்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் கம்பளி பூச்சிகளை
அழிக்க உரிய பூச்சி கொல்லி மருந்துகளை இப்பகுதிகளில் அடிக்கவும்,
சுகாதாரக்கேடு நிறைந்த ஓடையை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.


