/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/புது திருடர்களால் தடயங்கள் அழிப்பு : துப்பு கிடைக்காமல் தவிக்கும் போலீசார்புது திருடர்களால் தடயங்கள் அழிப்பு : துப்பு கிடைக்காமல் தவிக்கும் போலீசார்
புது திருடர்களால் தடயங்கள் அழிப்பு : துப்பு கிடைக்காமல் தவிக்கும் போலீசார்
புது திருடர்களால் தடயங்கள் அழிப்பு : துப்பு கிடைக்காமல் தவிக்கும் போலீசார்
புது திருடர்களால் தடயங்கள் அழிப்பு : துப்பு கிடைக்காமல் தவிக்கும் போலீசார்
திண்டுக்கல் : கொள்ளையில் ஈடுபடும் புது திருடர்கள், தடயங்களை அழிப்பதால், குற்றவாளிகளைப் பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தபோதும், எவ்வித தடயமும் சிக்கவில்லை. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தற்போது பெரும்பாலும் கைரேகைகளை அழித்து விடுகின்றனர். பொருட்களை விட்டுச் சென்றாலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தந்திரமாக செயல்படுகின்றனர். திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோரில் பலர், 'புதிய வரவு'களாக உள்ளனர். எனவே சில இடங்களில் ரேகை பதிவுகள் கிடைத்தபோதும், குற்றவாளிகளை பிடிப்பதில் பலனளிப்பதில்லை. 35 ஆயிரம் ரூபாய்க்கு கூடுதல் மதிப்பிலான நகைகள் திருட்டு போகும் சூழலில், டி.ஐ.ஜி., வரையிலான உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டிய நிலை உருவாகும். இதனை தவிர்க்க, பல சம்பவங்களில் வழக்கு பதிவது தாமதப்படுத்தப்படுகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை அதிகமாக இருந்தபோதும், பத்தாயிரம் ரூபாயாக மட்டுமே கணக்கிடப்படுகிறது'' என்றார்.


