ADDED : ஆக 30, 2011 12:03 AM
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் விதை கிராம திட்டத்தின் கீழ் ஐம்பது சதவீத மானிய விலையில், விதை நெல் விவசாய துறை மூலம் வழங்கப்பட்டது.
வேதாரண்யம் நகராட்சியை சேர்ந்த வேம்பத்தேவன்காடு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்ப ள்ளி வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு வேதாரண்யம் எம்.எல்.ஏ., காமராஜ் தலைமை வகித்து, 65 விவசாயிகளுக்கு உயர்தர நெல்விதை, பத்து விவசாயிகளுக்கு புதிய ரக ஆராய்ச்சி நெல்விதை, சிறுதலை மற்றும் பயிர் பாதுகாப்பு உரங்கள், விவசாய இடுபொருட்களை வழங்கினார். விழாவில் உதவி வேளாண் அலுவலர் வேதரத்தினம் வரவேற்றார். வேளாண் விவசாய உதவி இயக்குனர் மணிகண்டன், விதை கிராம திட்ட தொழில்நுட்பம் குறித்து பேசினார். விழாவில், கிராமத் தலைவர் மூர்த்தி, முன்னோடி விவசாயி ராஜகிளி, நகராட்சி கவுன்சிலர் ராமகிருஷ்ணன் மற்றும் உதவி விவசாய அலுவலர் உள்பட பலர் பங்கேற்றனர். உதவி விவசாய அலுவலர் வீர சுதாகர் நன்றி கூறினார்.


