Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் மாவட்டத்தில் பால் உற்பத்தி 2.15 லட்சம் லிட்டர் இலக்கு: கலெக்டர்

விழுப்புரம் மாவட்டத்தில் பால் உற்பத்தி 2.15 லட்சம் லிட்டர் இலக்கு: கலெக்டர்

விழுப்புரம் மாவட்டத்தில் பால் உற்பத்தி 2.15 லட்சம் லிட்டர் இலக்கு: கலெக்டர்

விழுப்புரம் மாவட்டத்தில் பால் உற்பத்தி 2.15 லட்சம் லிட்டர் இலக்கு: கலெக்டர்

ADDED : செப் 07, 2011 12:14 AM


Google News

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 2.15 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மணிமேகலை தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலர்கள் மற்றும் தனி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., வெங்கடாஜலம், ஆவின் பொது மேலாளர் சந்தரமகாலிங்கம், உதவி பொது மேலாளர் மாரிகனி உட்பட பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் மணிமேகலை பேசியதாவது: மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு முன் தினமும் 1.45 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 1.95 லட்சம் உற்பத்தி செய்யப்படுகிறது. அரசு சார்பில் பல முயற்சிகளை எடுத்து புதிய சங்கங்களை உருவாக்கவும், செயல்படாத சங்கங்களை புதுப்பித்ததும் இதற்கு காரணமாகும். பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க பல சலுகைகளை அரசு செய்கிறது. அதனை பால் உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூல் வெண்மை புரட்சியை உருவாக்க முடியும். மாவட்டத்தில் பால் உற்பத்தி 1.95 லட்சம் லிட்டர் என்பதை 2.15 லட்சம் லிட்டர் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



இந்த இலக்கை விரைவில் எட்ட உள்ளூரிலிருக்கும் பால் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அரசின் பல்வேறு சலுகைகளை எடுத்துக் கூறி பால் தரத்தை பொறுத்து லிட்டருக்கு 14.50 ரூபாயிலிருந்து 18.50 ரூபாய் வரை வழங்குவதையும், மருத்துவ வசதிகளையும் எடுத்துக் கூற வேண்டும்.



மாவட்டத்தில் இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்தில் அருமலை, கருவம்பாக்கம் கிராமங்கள் தேர்வு செய்து தலா 50 கறவை மாடுகள் வழங்க உள்ளோம். இதனால் பால் உற்பத்தி அதிகரிக்கும். தாட்கோ, மகளிர் திட்டம் போன்ற துறைகள் மூலம் மாடுகள் வாங்க கடன் பெற்றவர்களையும் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் சேர்க்க வேண்டும். மாவட்டத்தில் ஆவின் மூலம் 10 டாக்டர்கள் கிராமங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இதனை 32 டாக்டர்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிலுவையில் உள்ள பால் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. கறவை மாடுகள் வாங்க கடன் திட்டத்திற்கு ஆவின் பல உதவிகளை செய்து வருகிறது. செயல்படாத சங்கங்களை செயல்படுத்த வேண்டும். புதிய சங்கங்களை உருவாக்க தனி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கத்திற்கு தேவையான உதவிகளையும், வசதிகளையும் சங்க செயலாளர்களுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் மணிமேகலை பேசினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us