Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் பொன்முடி திடீர் கைது

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் பொன்முடி திடீர் கைது

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் பொன்முடி திடீர் கைது

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் பொன்முடி திடீர் கைது

ADDED : செப் 15, 2011 11:23 PM


Google News
Latest Tamil News

முதுநகர்:கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியை, முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்து திருவாரூர் கோர்ட்டிற்கு அழைத்துச் சென்றனர்.விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க நிலத்தை மோசடியாக வாங்கிய வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, கடந்த 31ம் தேதி கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.நில அபகரிப்பு வழக்கில் பொன்முடிக்கு ஜாமின் கிடைத்தால், திருவாரூரில் கடந்த ஜூன் 5ம் தேதி நடந்த தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியது தொடர்பாக, தகாத வார்த்தைகளால் பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் பதிவு செய்த வழக்கில், கைது செய்யும் பொருட்டு, திருவாரூர் போலீசார், கடந்த 7ம் தேதி முதல் தினமும் கடலூர் மத்திய சிறை முன் காத்திருந்தனர்.



இதையறிந்த பொன்முடி, திருவாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமின் கோரி, கடந்த 13ம் தேதி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. முன் ஜாமின் மனு விசாரணைக்கு முன்பாக பொன்முடியை கைது செய்ய @பாலீŒõர் முடிவு செய்தனர்.அதன்படி, டி.எஸ்.பி.,க்கள் ராஜேந்திரன், குருசாமி தலைமையில், 40 ஆயுதப்படை போலீசார் நேற்று காலை 8 மணிக்கு கடலூர் மத்திய சிறைக்கு வந்தனர். 10.30 மணிக்கு சிறைக் கண்காணிப்பாளரை சந்தித்த டி.எஸ்.பி., ராஜேந்திரன், திருவாரூரில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் பொன்முடியை கைது செய்துள்ளதாகவும், அவரை திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அனுமதி கோரி கடிதம் கொடுத்தனர்.



அதையேற்று, காலை 11.15 மணிக்கு சிறையிலிருந்த பொன்முடியை சிறைக் காவலர்கள், திருவாரூர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின், திருவாரூர் போலீசார், பொன்முடியை பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் திருவாரூக்கு அழைத்துச் சென்றனர்.சிறை வாசலில் போலீஸ் வேனில் இருந்துபடி நிருபர்களிடம் பேசிய பொன்முடி, 'திருவாரூர் பொதுக் கூட்டத்தில் பேசிய வழக்கில் என்னை கைது செய்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு விசாரணைக்கு முன்னதாக கைது செய்துள்ளனர்' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us