/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குண்டுவெடிப்புக்கு எதிர்ப்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்குண்டுவெடிப்புக்கு எதிர்ப்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
குண்டுவெடிப்புக்கு எதிர்ப்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
குண்டுவெடிப்புக்கு எதிர்ப்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
குண்டுவெடிப்புக்கு எதிர்ப்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 10, 2011 03:50 AM
தஞ்சாவூர்: டில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குண்டு வெடித்தது.
இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து நீதிமன்றங்களுக்கும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு போன்ற தீவிரவாத நடவடிக்கைளுக்கு வக்கீல்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.நேற்று தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் பணியாற்றும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.சதிருத்துறைப்பூண்டி: சதிருத்துறைப்பூண்டியிலுள்ள வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். திருத்துறைப்பூண்டி பார் கவுன்சில் தலைவர் பாஸ்கர், செயலாளர் அருட்செல்வன் தலைமையில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


