4-வது நாளாக கூடங்குளத்தில் உண்ணாவிரதம்
4-வது நாளாக கூடங்குளத்தில் உண்ணாவிரதம்
4-வது நாளாக கூடங்குளத்தில் உண்ணாவிரதம்
ADDED : செப் 14, 2011 10:56 AM
நெல்லை: கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக 4-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையத்தினை நிரந்தரமாக மூடக்கோரி இடிந்தகரை அருகே கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள், மீனவர்கள் என பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 4-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.