தமிழக இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் மலேசிய தமிழர்கள்
தமிழக இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் மலேசிய தமிழர்கள்
தமிழக இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் மலேசிய தமிழர்கள்
மதுரை : தமிழகத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவோர் குறித்து மலேசிய தமிழர்கள் வியப்பு தெரிவிக்கின்றனர்.
தற்போது இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு, 10ஏக்கர் நிலத்தில் அதை செயல்படுத்த ஆர்வம் கொண்டனர். மலேசியாவில் நடந்த சித்த வைத்திய மாநாட்டிற்கு வந்த தமிழகத்தினர் தொடர்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அண்மையில் தமிழகம் வந்தனர். பல இடங்களில் இயற்கைவேளாண்மையில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து தகவல்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: விவசாயத்தில் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இயற்கை விவசாயம் மீது எங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. புதுச்சேரியில் மாணிக்கம் என்பவர் சமைக்காத உணவை தனது ஓட்டலில்(எனர்ஜி ஹோம்) விற்பனை செய்கிறார். அவர் அடுப்பே பயன்படுத்துவதில்லை. ஜூஸ், அவல் போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். மூன்று வேளை உணவும் அங்கு கிடைக்கும். ஆரோவில்லில் ஐரோப்பியரான பென்னட் தனது நிலத்தில் மரங்களை வளர்த்து, அதை வெட்டி மக்கச் செய்து, இயற்கை உரத்தால் நிலத்தை வளமுள்ளதாக்கி இருக்கிறார். அதில் காய்கறிகள், பழங்கள், விதைகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்குகிறார்.
சேலத்தில் சுந்தரேசன் என்பவர், சிவப்பு, மஞ்சள் என இரண்டு வகை பேரீச்சம் பழம் விளைய வைக்கிறார். சுவையான அவற்றை பதப்படுத்தாமலேயே விற்பனை செய்கின்றனர். மதுரை மனைஅறிவியல் கல்லூரியில் டீன் பானுமதி எங்களுக்கு ஜாம், ஸ்குவாஷ், ஜெல்லி, தக்காளி ஊறுகாய் போன்றவை தயாரிக்க பயிற்சி அளித்தார்.
இயற்கை விவசாயத்திற்கு பஞ்சகாவ்யம், ஈ.எம். டெக்னாலஜி திரவம், மண்புழு உரம் இருந்தால் போதும். துளசி, வேம்பு உட்பட தமிழ் மூலிகைகளை வைத்து பூச்சிக் கொல்லி தயாரிக்கலாம். பூச்சிகளுக்கு மலட்டு தன்மை ஏற்படுத்தி இனப்பெருக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். செயற்கை உரம், மருந்தை பயன்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகளும் இறக்கின்றன, என்றனர்.


