/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அலைக்கழிக்கும் அதிகாரிகள்; கிராம மக்கள் சரமாரி புகார்!அலைக்கழிக்கும் அதிகாரிகள்; கிராம மக்கள் சரமாரி புகார்!
அலைக்கழிக்கும் அதிகாரிகள்; கிராம மக்கள் சரமாரி புகார்!
அலைக்கழிக்கும் அதிகாரிகள்; கிராம மக்கள் சரமாரி புகார்!
அலைக்கழிக்கும் அதிகாரிகள்; கிராம மக்கள் சரமாரி புகார்!
ADDED : ஆக 28, 2011 11:48 PM
அன்னூர் : 'சான்று பெற வடக்கு தாலுகா அலுவலகத்துக்கு பல முறை அலைய
வேண்டியுள்ளது' என, குறை கேட்பு முகாமில், மக்கள் சரமாரியாக புகார்
தெரிவித்தனர்.அன்னூர் பயணியர் மாளிகையில் நேற்று முன் தினம் குறைகேட்பு
முகாம் நடந்தது.
அவிநாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி மனுக்களை பெற்று
பேசுகையில், ''புதிய தாலுகா அமைக்க குறைந்தது 30 ஊராட்சிகள் வேண்டும் என்று
அதிகாரிகள் தெரிவித்தனர். ''அதன் அடிப்படையில் அன்னூர் ஒன்றியத்துடன்,
எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளையும் சேர்த்து
புதிய தாலுகா அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் மாவட்ட
நிர்வாகத்திடமிருந்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அன்னூர்
தாலுகா குறித்த அறிவிப்பு வெளியாகும்,'' என்றார். முகாமில் அக்கரை
செங்கப்பள்ளி, ஒட்டர்பாளையம் கிராம மக்கள் கூறுகையில், 'வருமானம், ஜாதி
உள்ளிட்ட பல்வேறு சான்றுகள், பட்டா மாறுதல் ஆகியவற்றுக்காக அன்னூர் வருவாய்
ஆய்வாளர் அலுவலகத்துக்கு இரண்டு முறை செல்ல வேண்டி உள்ளது. அதன் பின்
மூன்று பஸ் மாறி கோவை வடக்கு தாலுகா அலுவலகத்துக்கு மூன்று முறை செல்ல
வேண்டி உள்ளது. இதனால் பல நாள் கூலி இழந்து அலைய வேண்டி உள்ளது' என்று
சரமாரியாக புகார் தெரிவித்தனர்.வடக்கலூர் மக்கள் கூறுகையில்,
''வடக்கலூருக்கு பஸ் இயக்கக்கோரி எம்.எல்.ஏ.,வின் பரிந்துரை கடிதத்துடன்
அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும்
அலட்சியப்படுத்துகின்றனர்,'' என்றனர். எல்லப்பாளையம் மக்கள் கூறுகையில்,
''எல்லப்பாளையம் பிரிவுக்கு இரண்டு ரூபாய் பஸ் கட்டணம் குறைத்து,
கலெக்டரும், ஆர்.டி.ஓ., வும் உத்தரவு பிறப்பித்தும் எந்த பஸ் உரிமையாளரும்
அந்த உத்தரவை மதிக்கவில்லை,'' என்றனர். முதியோர் உதவித்தொகை, இலவச பட்டா,
ரேஷன் கார்டு மற்றும் வேலை வாய்ப்பு கோரி 550 மனுக்கள் பெறப்பட்டன. துணை
தாசில்தார் சுமதி, பி.டி.ஓ.,க்கள் பூபதி, சுப்பிரமணியம், வருவாய் ஆய்வாளர்
ரவிச்சந்திரன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் காளியப்பன், நகரச் செயலாளர்
சவுக்கத் அலி உள்பட பலர் பங்கேற்றனர்.


