மதுரை : மதுரை மாவட்டம் தாணிப்பாறை சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, பல்துறை விளக்க கண்காட்சி நேற்று துவங்கியது.
கலெக்டர் சகாயம் துவக்கி வைத்தார். செய்தி மக்கள் தொடர்பு, ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வேளாண்மை உட்பட பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களை விளக்கும் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன. கோயில் அன்னதான உணவை கலெக்டர் சாப்பிட்டு, தரத்தை ஆய்வு செய்தார். தாணிப்பாறையில் கழிப்பறையை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட்டார். எம்.எல்.ஏ.,க்கள் முத்துராமலிங்கம், கதிரவன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் பங்கேற்றனர். நாளை வரை கண்காட்சி நடக்கிறது.


