Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/முதியவரிடமிருந்து ரூ.60,000 பறிப்பு

முதியவரிடமிருந்து ரூ.60,000 பறிப்பு

முதியவரிடமிருந்து ரூ.60,000 பறிப்பு

முதியவரிடமிருந்து ரூ.60,000 பறிப்பு

ADDED : செப் 07, 2011 01:47 AM


Google News
அரியலூர்: அரியலூர் பேங்கிலிருந்து பணம் எடுத்து கொண்டு வந்த முதியவரிடமிருந்த, 60 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, நமங்குணம்-பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(72). அரியலூர் கடைவீதியில் உள்ள இந்தியன் வங்கிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு முதியவர் பெரியசாமி வந்தார். சத்திரம் தெருவில் உள்ள ஸ்வீட்ஸ் கடையில் ஸ்வீட் வாங்கி கொண்டிருந்தார். முதியவர் பெரியசாமி வங்கிலிருந்து பணம் எடுத்து வருவதை அறிந்து பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், ஸ்வீட் கடையில் இருந்த பெரியசாமி கவனத்தை திருப்பி திசை திருப்பி விட்டு, அவரிடமிருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அபகரித்து சென்று விட்டான்.இதுபற்றி முதியவர் பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us