/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பரமத்தி டவுன் பஞ்., சார்பில் நடந்த கொசு ஒழிப்பு பணிபரமத்தி டவுன் பஞ்., சார்பில் நடந்த கொசு ஒழிப்பு பணி
பரமத்தி டவுன் பஞ்., சார்பில் நடந்த கொசு ஒழிப்பு பணி
பரமத்தி டவுன் பஞ்., சார்பில் நடந்த கொசு ஒழிப்பு பணி
பரமத்தி டவுன் பஞ்., சார்பில் நடந்த கொசு ஒழிப்பு பணி
ADDED : ஜூலை 31, 2011 01:35 AM
ப.வேலூர்: பரமத்தி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏ.டி.எஸ்.
கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.பணியை, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் கல்யாணசுந்தரம், முதன்மை குடிமை மருத்துவர் டாக்டர் மாணிக்கவாசகம் ஆகியோர் துவக்கி வைத்தனர். டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சேகர், மருத்துவ அலுவலர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இப்பணியில், 50 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள், வீடு வீடாக சென்று நீர் நிலைகளில் அபேட் கொசுப்புழு ஒழிப்பு மருந்தை தெளித்தனர். வீட்டை சுற்றிலும் தேங்கி உள்ள மழைநீர், உடைந்த தேங்காய் தொட்டிகள், பழைய டயர், பிளாஸ்டிக் கப், உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர். மேலும், பயன்படுத்தாத டயர் மற்றும் ஆட்டுக்கல் அகற்றப்பட்டது. தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு இருந்தால், மருந்து கலவை போட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் தொட்டியை வாரம் ஒருமுறை நன்கு தேய்த்து கழுவி வைக்கவும், தொட்டி, பானைகளில் கொசுக்கள் எளிதில் புகாத வகையில் மூடி வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், சுகாதார மேற்பார்வையாளர் லோகநாதன், சுகாதார ஆய்வாளர்கள் குமார், ராஜசேகர், செவிலியர்கள், களப்பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


