ADDED : ஆக 22, 2011 12:18 AM
செஞ்சி : வல்லத்தில் வேளாண்மைத்துறை மூலம் பார்த்தீனிய செடிகள் அழிப்பு
முகாம் நடந்தது.ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
ஊராட்சி
தலைவர் ரத்தினம் முன்னிலை வகித்தார். வட்டார வேளாண் உதவி இயக்குனர்
துரைசாமி வரவேற்றார். விழுப்புரம் வேளாண் அலுவலர் சரவணன் பார்த்தீனிய
செடியின் விஷத்தன்மையும், இதனால் ஏற்படும் நோய்கள் குறித்தும்
விளக்கினார்.உதவி அலுவலர் கண்ணன் செடி அழிப்பு செயல் விளக்கமளித்தார். உதவி
வேளாண் அலுவலர்கள் மாணிக்கம், மணிவேல் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.


