காயல்பட்டினம் நகராட்சி தேர்தல்: ரத்து செய்ய ஐகோர்ட்டில் வழக்கு
காயல்பட்டினம் நகராட்சி தேர்தல்: ரத்து செய்ய ஐகோர்ட்டில் வழக்கு
காயல்பட்டினம் நகராட்சி தேர்தல்: ரத்து செய்ய ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : செப் 26, 2011 10:07 PM
மதுரை: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சித் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய, மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
காயல்பட்டினம் மக்கள் சேவா கரங்கள் நிறுவனர் ஜலாலி, வழக்கறிஞர் காஜா மொய்தீன் மூலம் தாக்கல் செய்த பொது நல வழக்கு: காயல்பட்டினம் ஏற்கனவே தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்தபோது 1996, 2001ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
அப்போது தலைவர் பதவி, பெண் (தனி) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. தமிழக பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி சட்டங்களின்படி, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இட ஒதுக்கீடு மாற்றப்பட வேண்டும். தற்போது நகராட்சித் தலைவர் பதவியை பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கி, தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. அதை ரத்து செய்ய வேண்டும்; இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மனு நாளை, ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வருகிறது.


