Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சம்பளத்துடன் விடுமுறை அவசியம் கூடலூர் எம்.எல்.ஏ., கலெக்டருக்கு மனு

சம்பளத்துடன் விடுமுறை அவசியம் கூடலூர் எம்.எல்.ஏ., கலெக்டருக்கு மனு

சம்பளத்துடன் விடுமுறை அவசியம் கூடலூர் எம்.எல்.ஏ., கலெக்டருக்கு மனு

சம்பளத்துடன் விடுமுறை அவசியம் கூடலூர் எம்.எல்.ஏ., கலெக்டருக்கு மனு

ADDED : அக் 05, 2011 10:37 PM


Google News
பந்தலூர் : 'தேர்தல் நடக்கும் நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. திராவிடமணி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் டான்டீ தேயிலை தோட்டங்கள் மட்டுமின்றி தனியார் தேயிலை தோட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதில் தனியார் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அதிகாலை 6 மணிக்கு பணிக்கு வரவழைக்க படுகின்றனர். மேலும் கடந்த 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தனியார் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஓட்டுப்போட செல்வதற்கு விடுப்பு கேட்டபோது, மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அதனை மீறி விடுப்பு எடுத்தவர்கள், விடுமுறை தினங்களில் பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து அது குறித்து அப்போதைய மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காணப்பட்டது.

டான்டீ தேயிலை தொழிற்சாலைகளில் பகல் நேரத்தில் வாக்களிக்க சென்ற தொழிலாளர்கள் இரவு பணிக்கு வரவேண்டும் என்று கூறப்பட்டது.

எனவே, வரும் 17ம் தேதி நடக்க உள்ள உள் ளாட்சி தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கவும், மக்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கவும் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம், டான்டீ தேயிலை தொழிற்சாலை நிர்வாகம் ஆகியவற்றுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு திராவிடமணி கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us