/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/குரூப் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்புகுரூப் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
குரூப் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
குரூப் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
குரூப் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
கிருஷ்ணகிரி: அண்ணா மேலாண்மை நிலையம் சார்பில் நடத்தப்படும் குடிமைபணிகளுக்கான முதல் நிலை தேர்வுக்கான பயிற்சியில் சேர கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆகும். இதர வகுப்பினர் 30 வயதுக்குட்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் 33 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தேர்வு எழுத சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தர்மபுரி மற்றும் சிவகங்கை ஆகிய மையங்களில் ஏதேனும் ஒரு மையத்தை தேர்வு செய்ய வேண்டும்.


